பசிக்காமல் சாப்பிட்டால் உணவு உடலில் தேங்கும் கழிவாகுமா?

17-மார்-2025

உடல் கேட்கிற போது உணவு கொடுக்க வேண்டுமா அல்லது நாம் நினைக்கும் போதெல்லாம் கொடுக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

17-மார்-2025

பொதுவாக நம் உடல், உணவை கேட்கிறதா அல்லது வேறு வேலையில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை அறியாமல், நாம் சாப்பிடும் உணவுகள் நிச்சயமாக சக்தியைத் தராது.

17-மார்-2025

பசி அல்லது தேவை இல்லாமல் உண்ணும் போது உடலின் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் பெருக வழி செய்யும்.

17-மார்-2025

பசியை உணர்ந்து உடல் கேட்கிற போது உணவு கொடுப்பதுதான், நம் உடலை துாய்மையாக வைத்துக் கொள்வதன் அடிப்படை.

17-மார்-2025

உண்ணும் போதே வேறு பல வேலைகளையும் (டி.வி.பார்ப்பது) நாம் செய்தால் முழு கவனமும் உண்ணுவதில் இருக்காது. சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது.

17-மார்-2025

பசிக்கிற போது அளவோடு, வேறு வேலைகள் ஏதும் செய்யாமல் விருப்பத்தோடு சாப்பிட வேண்டும்.

17-மார்-2025

உடல் தனக்கு தேவையான விஷயங்களை நமக்குப் புரியும்படி அறிவிக்கும். அதன்படி நாம் உண்ணும் போது அது ஆற்றலாக மாறும் இல்லை என்றால் கொழுப்பாக தேங்கும்.

17-மார்-2025