அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. இன்று காதலர் தினம் ...

14-பிப்-2025

காதலர் தின வரலாற்றை பார்ப்போமா... 3ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார்.

14-பிப்-2025

இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

14-பிப்-2025

அவரது நினைவு நாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.

14-பிப்-2025

அன்பு, காதல், பாசம் என மனித குலத்தில் மகத்தான குணங்களை முன்வைத்து இது கொண்டாடப்படுகிறது. இந்நாள் தான் காதலர்களுக்கு பொன்னாள்.

14-பிப்-2025

'வேலன்டைன்ஸ் டே!' காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுத்து அசத்துவர்.

14-பிப்-2025

காதலர்கள் மட்டுமின்றி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள ஏற்ற நாளாக இருப்பதால், இந் நாளுக்கு 'அன்பர்கள் தினம்' எனவும் பெயர் உள்ளது.

14-பிப்-2025