முதியோரின் மனச்சோர்வு... கண்டுக்காமல் விடக்கூடாது!

05-ஜன-2026

முதுமை வயதில் மனச்சோர்வு என்பது, முக்கிய பிரச்னை. இதை சாதாரண சோகம் என்று கடந்துவிட முடியாது.

05-ஜன-2026

உடல் பலவீனம், பண பற்றாக்குறை, எதிர்பார்ப்புகள், நெருங்கியவர்களின் இறப்புகள் மற்றும் அலட்சியம், உடல் நலக்கோளாறு போன்ற பல காரணங்களால் மனச்சோர்வு ஏற்படுகிறது.

05-ஜன-2026

சோர்வு, தனிமை, துாக்கமின்மை, ஆர்வமின்மை, எரிச்சல், நினைவாற்றல் குறைவு போன்றவை மனச்சோர்வுக்கான முக்கிய அறிகுறிகள்.

05-ஜன-2026

இதை கவனிக்க தவறினால், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மனச்சோர்வு உள்ளவர்கள் துாக்கமின்மையால் அவதிப்படுவர்; அலட்சியமாகவிட்டால், சிக்கல்கள் அதிகரிக்கும்.

05-ஜன-2026

இதற்கு, உடனடியாக மனநல ஆலோசகர் அல்லது மருத்துவர்களை அணுக வேண்டும். மனச்சோர்வு அறிகுறியுள்ள முதியவர்களிடம், அதிக நேரம் செலவிட்டு அவர்களை பேச வைத்து கேட்க வேண்டும்.

05-ஜன-2026

அவர்கள் பேசுவது சில நேரங்களில் அர்த்தமில்லாமல் இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் அவர் போக்கில் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

05-ஜன-2026

இரவில் நன்கு துாங்குகின்றார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். துாக்கமின்மை பிரச்னையுள்ள முதியோர் காபி, மதுபானம் பழக்கத்தை குறைக்க வேண்டும்.

05-ஜன-2026

குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுதல், ஒரே நேரத்தில் உறங்க செல்வதையும், எழுவதையும் பழக்கப்படுத்த வேண்டும்.

05-ஜன-2026

படுக்கைக்கு முன் மொபைல் மற்றும் டி.வி., பார்ப்பதை தவிர்த்தல், துாக்கத்துக்கேற்ப அறை சூழல் அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

05-ஜன-2026

சரியான துாக்கம் இருந்தும், தொடர்ந்து மனச்சோர்வு அறிகுறிகள் தென்பட்டாலும், அலட்சியப்படுத்தாமல் டாக்டர் அல்லது மனநல ஆலோசகர்களை அணுக வேண்டும்.

05-ஜன-2026