கண் வறட்சி ஏற்படுவது ஏன்?

10-டிச-2024

தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் கண் வறட்சி ஏற்படுகிறது. கண்ணில் போதிய ஈரத்தன்மை இல்லாததால் இது ஏற்படும்.

10-டிச-2024

இதனால் கண் ஒட்டியிருப்பது போன்ற உணர்வு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணை திறக்க சிரமம், தலைவலி ஏற்படுகிறது.

10-டிச-2024

சிறிய அளவில் ஏற்படும் கண் வறட்சியை கவனிக்காவிட்டால் பின் அதிகமாகி வேறு பல விளைவுகளை ஏற்படுத்தும்.

10-டிச-2024

வாதநோய் உள்ளவர்களுக்கும் கண் வறட்சி ஏற்படும். எதற்காக கண் வறட்சி ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

10-டிச-2024

கண்ணிற்கு குளிர்ச்சி, குளுமை அவசியம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதோடு உணவில் நெய்யை சேர்க்க வேண்டும்.

10-டிச-2024

கீரைகள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மசாலா உணவு, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கண்ணிற்கு வெளியே நெய், ஆமணக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.

10-டிச-2024

மது அருந்துபவர்கள், அதிகநேரம் ஏசியில் இருப்பவர்கள், போதிய துாக்கம் இல்லாதவர்களுக்கு கண்ணில் சூடு ஏற்பட்டு வறட்சி ஏற்படும். அதற்கு கால் உள் பாதம், உள்ளங்கையில் நெய் தடவலாம்.

10-டிச-2024

ஏசியில் இருக்கும் போது உடலின் ஈரத்தன்மை குறைகிறது. எனவே சிறிது நேரம் ஏசியை தவிர்த்து காற்றோட்டமான இடத்தில் அமர்வது நல்லது.

10-டிச-2024