ஆழந்த உறக்கத்துக்கு இரவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தவிர்க்கலாம்!

19-ஏப்-2025

சரியான நேரத்தில் மக்கள் துாங்குகின்றனரா என்பது குறித்த ஆய்வு, நாடு முழுதும் 10 மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்டது.

19-ஏப்-2025

இதில், 63 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடி மொபைல் போனில் வீடியோ பார்க்கின்றனர். 59 சதவீதம் பேர் மொபைல் போனில் உறவினர்கள், நண்பர்களுடன் பேசுகின்றனர்.

19-ஏப்-2025

இசை கேட்பது, செய்திகள் பார்ப்பது என்று 58 சதவீதம் பேரும், சமூக வலைதளங்களில் வரும் 'ஷார்ட்ஸ்' பார்ப்பது, 'ஆப்'களை உபயோகிப்பது என்று 57 சதவீதம் பேரும் நேரத்தைப் போக்குகின்றனர்.

19-ஏப்-2025

இதனால், 53 சதவீதம் பேருக்கு துாக்கம் தொடர்பான பல உடல் பிரச்னைகள் உள்ளன.

19-ஏப்-2025

விடுமுறை நாளாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதை பழக்கமாக்க வேண்டும்.

19-ஏப்-2025

துாக்கத்திற்கு முதல் எதிரி மொபைல் போன் என்பதை புரிந்து, துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே மொபைல் பார்ப்பதை தவிர்த்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.

19-ஏப்-2025

படுக்கையறையில், மங்கலான வெளிச்சம் தரும் மஞ்சள் நிற ஆம்பர் விளக்குகளை, மாலை 7:00 மணிக்கு மேல் பயன்படுத்தலாம். இது, இரவு நெருங்கிவிட்டது; துாங்க வேண்டும் என்ற சமிக்ஞையை மூளைக்கு தரும்.

19-ஏப்-2025