காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டு பிடிப்பான கடலில் மூழ்கியவர் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பான கடல்சார் பாதுகாப்பு இடுப்பு பட்டை கருவிக்கு மாநில அளவில் முதல்பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பரசன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.