ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பத்து யூனியன் அலுவலகங்களில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாளை முதல் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.ஈரோடு மாவட்டம் கல்விக்கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்கிறது.
வரும் 17ம் தேதி சத்தியமங்கலம் யூனியன் அலுவலகத்தில் நடக்கும் முகாமில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி யூனியன் பகுதி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 18ம் தேதி மொடக்குறிச்சி யூனியன் அலுவலகத்திலும், 19ம் தேதி சென்னிமலை யூனியன் அலுவலகத்திலும், 20ம் தேதி கொடுமுடி யூனியன் அலுவலகத்திலும் கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.மாணவ, மாணவியர் முகாமுக்கு வரும் போது, படிப்பு கட்டண விபரம், கடைசியாக படித்த படிப்பின் மதிப்பெண் சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிடச்சான்று கொண்டு வர வேண்டும்; நகல் போதுமானது.முகாம் நடக்கும் இடத்தில் முன்னோடி வங்கி மேலாளர், வங்கி கிளை அதிகாரிகள் மற்றும் யூனியன் அலுவலர்கள் மனுக்களை பெற்றுக் கொள்வர். மாணவ, மாணவியர் வரவில்லை என்றால், பெற்றோர் தேவையான அத்தாட்சியுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். மனுவை பெற்றுக் கொள்ளும் வங்கி அதிகாரிகள், மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் தருவர். வட்டார அளவில் முகாம் நடப்பதால், மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் சுடலைகண்ணன் தெரிவித்துள்ளார்.


