/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாற்று திறனாளிகள் 68 பேருக்கு நல உதவி

மாற்று திறனாளிகள் 68 பேருக்கு நல உதவி

ADDED : ஆக 04, 2010 03:40 AM


Google News

ஈரோடு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 68 பேருக்கு 3.63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமையில் நடந்தது. வீட்டுமனை பட்டா, தாட்கோ கடனுதவி உட்பட 315 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் 68 பேருக்கு மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்