/உள்ளூர் செய்திகள்/சேலம்/குளூனி பள்ளி பொன்விழா ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்

குளூனி பள்ளி பொன்விழா ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்

ADDED : ஆக 04, 2010 03:36 AM


Google News

சேலம்: சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது.சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் நோரா நிருபர்களிடம் கூறியதாவது:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அருளன்னை ஆன்மாரியால் 200 ஆண்டுகளுக்கு முன் குளூனி புனித சூசையப்பர் சபை உருவாக்கப்பட்டது.

அச்சபை கன்னியர்களால் சேலத்தில் 1960ம் ஆண்டு அன்பு, சேவை ஆகியவையை முதன்மையாகக்கொண்டு குளுனி மெட்ரிக் பள்ளி துவக்கப்பட்டது.தற்போது 3, 277 மாணவிகளையும், 100 ஆசிரியர்களையும் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். சாரணர் இயக்கத்தில் குடியரசு தலைவர் விருதை 20 மாணவியரும், தமிழக ஆளுநர் விருதை 24 மாணவியரும் பெற்றுள்ளனர்.



இப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 6 மற்றும்7ம் தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி., திலகவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 7ம் தேதி வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வெங்கடேசன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜா, மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்