கோபிசெட்டிபாளையம்:கோபி பெரியகொறவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லாததால், மாணவ மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது.கோபி பஞ்சாயத்து யூனியன் நாகதேவம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள பெரியகொறவம்பாளையத்தில் நடப்பாண்டு முதல் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியரும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தலைமையாசிரியரும் மட்டுமே பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களும் விடுமுறையில் செல்லும் போது பள்ளியில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படுகிறது.'கிராமப்புற பகுதியான பெரியகொறவம்பாளையம் நடுநிலை பள்ளிக்கு விரைவில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பஞ்சாயத்து தலைவர் சாந்தி, பி.டி.ஏ., தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.


