Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/மதுரா அக்ஷயா கார்த்திக்கின் மாண்டலின் அரங்கேற்றம்

மதுரா அக்ஷயா கார்த்திக்கின் மாண்டலின் அரங்கேற்றம்

மதுரா அக்ஷயா கார்த்திக்கின் மாண்டலின் அரங்கேற்றம்

மதுரா அக்ஷயா கார்த்திக்கின் மாண்டலின் அரங்கேற்றம்

ஆக 04, 2024


Latest Tamil News
மதுரா அக்ஷயா கார்த்திக்கின் மாண்டலின் அரங்கேற்றம் சென்னை மயிலாப்பூரில் உள்ள RR சபாவில் வெற்றிகரமாக நடந்தது. அக்ஷயா தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். U .நாகமணி மற்றும் யு.பி. ராஜு(சாஸ்திரிய மாண்டோலின் சிக்ஷனா). வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாண்டலின் தேர்ச்சி பெற்று வருகிறார். SIMA லாஸ் ஏஞ்சல்ஸ், DASC, சப்தமி (தேசிய அளவில் முதல் இடம்), HCL கச்சேரிகள், வீணை மஹோத்ஸவம், காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ், கார்வா டிரஸ்ட், ஸ்ரீ சங்கர மடம் காஞ்சிபுரம், ஆச்சார்ய நெட், ஜன் க்ருதி , வீணாவாதினி - உட்பட பல இசை நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் மற்றும் இந்தியாவில் அக்ஷயா தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் கலா ஸௌரபா 2K23. கலிபோர்னியாவின் சைப்ரஸ் நகரத்தில் இருந்து இசை உதவித் தொகையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் அவர், ஆன்லைன் வகுப்புகள் மூலம் இசையை கற்றுக் கொண்டார். மிகச் சிறிய வயதிலிருந்தே, அவர் பயிற்சி செய்தார், அவள் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைகளில் நேரில் பயிற்சி பெறுவதற்காக சென்னைக்கு செல்வார்.


U. P. ராஜு மற்றும் உ.நாகமணியின் வழிகாட்டுதலுடன் , அரங்கேற்றம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக சென்னை பிரம்மஞான சபையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், சிறப்பு விருந்தினராக புதுதில்லி ஷண்முகானந்தா சங்கீத சபாவின் செயலாளர் கிருஷ்ணசாமி. S, கலைஞர்கள் நெய்வேலி நாராயணன், டிரிப்ளிகேன் தவில் சேகர், நெற்குணம் சங்கர், பார்த்தசாரதி சுவாமி சபாவின் செயலாளர் எம். கிருஷ்ணமூர்த்தி, Arkay A S ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர் . அக்ஷயா 2 மணி நேர முழு நீள கர்நாடக இசை நிகழ்ச்சி அளித்தார் . வி வி ஸ்ரீனிவாச ராவ் வயலின், B கணபதிராமன் மிருதங்கம், மற்றும் திருச்சி கே.முரளி கடம் வாசித்தனர். பைரவி அட தாள வர்ணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது, அவளுடைய வலுவான தாள கட்டளையைக் காட்டுகிறது. பின்னர் 'ஸ்ரீ மஹா கணபதிம்' கௌளை ராகத்தில் தெளிவுடனும் பக்தியுடனும் வாசித்தாள் . முத்தையா பாகவதர் பசுபதி ப்ரியாவில் இயற்றிய 'சரவண பவ' வின் தாள சுறுசுறுப்பை வெளிப்படுத்தி கச்சேரி வேகம் பிடித்தது. கச்சேரியின் முக்கிய கட்டமான ராகம் தானம் பல்லவிக்கு கந்தஜாதி திரிபுத தாளத்தில் சண்முகப்பிரியா ராகத்தில் அவரது குருக்கள் இயற்றிய பல்லவியை இசைத்தார். அக்ஷயா மிக அழகாக ராக ஆலாபனையில் தானமும் வாசித்து பல்லவியில் மூன்று வெவ்வேறு ராகங்களில் நிரவல் செய்து ஸ்வரம் வாசித்தார், இதை ரசிகர்கள் கரகோஷத்துடன் ரசித்தார்கள். அருமையான தனி அவர்தனம் முடிந்தவுடன் அக்ஷயா 'மைத்ரீம் பஜத', 'கருணை தெய்வமே' மற்றும் லால்குடி ஜி. ஜெயராமனின் மோகன கல்யாணியில் தில்லானாவுடன் ரசிகர்களின் கைதட்டலுடன் தனது கச்சேரியை முடித்தார்..


ஒட்டுமொத்தமாக, மாண்டலின் அரங்கேற்ற கச்சேரியில் அக்ஷயாவின் திறமை மற்றும் சிறந்த பயிற்சி ஆகியவற்றைக் காட்டியது. அக்ஷயா தொடர்ந்து அதிக வாய்ப்புகளைப் பெறுவதோடு, எதிர்காலத்தில் மாண்டலிநில் சிறந்து கலைஞராக வருவார் என்பதற்கு எந்த சந்தேகம் இல்லை.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us