Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை

UPDATED : ஜூன் 03, 2025 06:14 AMADDED : ஜூன் 02, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
அங்காரா: ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்' என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியது. ரஷ்யாவில் விமான நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்கு பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகள் துருக்கியில் உள்ள சிராகன் அரண்மனையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் போரில் கொல்லப்பட்ட 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன. நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார். துருக்கிய உளவுத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us