Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ADDED : ஜூன் 23, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டி: ஈரானின் முரட்டுத்தனமான, தீவிரமான அணுசக்தி நிலையங்களை அழிக்க அதிபர் டிரம்ப் துணிச்சலான நடவடிக்கை எடுத்தார். கடந்த கால அதிபர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க விரும்பினர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எந்த அதிபருக்கும் அதைச் செய்ய தைரியம் இல்லை. அதிபர் டிரம்ப் தைரியமாக செய்தார். அமெரிக்கா இன்று மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார்.

அணு ஆயுதங்களை உருவாக்கும் ஈரானின் திறனை அமெரிக்கா பறித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. அணு ஆயுதத்தை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் திறன் அவர்களிடம் இனி இல்லை. ஈரான் மக்கள் ஏன் பல ஆண்டுகளாக தங்களை அடக்கி வரும் இந்த நம்பமுடியாத வன்முறை ஆட்சியின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us