Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

UPDATED : ஜூன் 23, 2025 09:14 AMADDED : ஜூன் 22, 2025 09:34 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, அன்டானியோ குட்டரெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பிரச்னையை மேலும் அதிகரிக்கும் செயல் ஆகும்.

அமெரிக்காவின் தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தான நடவடிக்கை. இந்த மோதல் எல்லையை மீறி செல்கிறது. இந்த தாக்குதல் மக்களுக்கும், உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த ஆபத்தான நேரத்தில், குழப்பமான சூழலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை தீர்வு கிடையாது. ஒரே பாதை ராஜதந்திரம் தான். ஒரே நம்பிக்கை அமைதி தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us