Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

ADDED : செப் 26, 2025 04:16 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: 'இந்தியா மீதான டிரம்பின் வரிகள் ரஷ்யாவைப் பாதிக்கின்றன' என்று நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தை ஒட்டி, நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் கூறியதாவது: இந்தியா மீதான டிரம்ப்பின் வரி ரஷ்யாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு ரஷ்யாவை பாதிக்கின்றன. டில்லியில் இருந்து புடினுக்கு போன் அழைப்புகள் சென்றுள்ளது. பிரதமர் மோடி, உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டமென்னவென்று கேட்டுள்ளார்.

டிரம்பின் நடவடிக்கை புடினுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அதிபர் டிரம்ப் தான் சொல்வதைச் செயல்படுத்துகிறார், ஆனால் இதுவரை நாம் கூட்டாக இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாததில் வருத்தமடைகிறேன். ஆனால் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் பணியாற்றி வருகிறார். இவ்வாறு நேட்டோ அமைப்பு தலைவர் தெரிவித்தார்.

காகித புலி!

ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான தனது முயற்சிகள் எதிர்பார்த்ததை விட கடினமாக இருப்பதாக டிரம்ப் ஒப்புக்கொண்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'ரஷ்யாவை காகிதப் புலியைக் குறிப்பிட்டதன் மூலம் அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு நடவடிக்கை எடுப்பதில் சரியாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்' என நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் பதில் அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us