Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது: 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் காயம்

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது: 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் காயம்

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது: 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் காயம்

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது: 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் காயம்

ADDED : ஜூன் 01, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
மாஸ்கோ: ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மாஸ்கோவிலிருந்து கிளிமோவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வைகோனிச்ஸ்கி என்ற இடத்தில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில், டிரைவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாலம் இடிந்து விழுந்து ரயில் விபத்தில் சிக்கிய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us