மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கொந்தளிப்பு!
மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கொந்தளிப்பு!
மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கொந்தளிப்பு!



ஜெயில் உடைப்பு
நர்சிங்டி மாவட்டத்தில் சிறையை முற்றுகையிட்ட மாணவர்கள், கதவுகளை உடைத்து 800 கைதிகளை விடுவித்தனர். சிறைக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய வங்கிகள், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் இணையதளங்கள் போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டன. மூன்று நாட்களாக நடந்து வரும் வன்முறையில், இதுவரை 133 பேர் பலியானதாக தெரிகிறது; 1,000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். அதில் பாதி பேர் போலீஸ்காரர்கள்.ஊரடங்கு உத்தரவை அடுத்து, கலவரம் செய்வோரை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டது.
பயணம் ரத்து
'வங்கதேசத்தில் சிக்கியுள்ள 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுவரை 778 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மற்ற மாணவர்களும் பாதுகாப்பாக வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.கலவர சூழல் தொடர்வதால் ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை பிரதமர் ஷேக் ஹசீனா ரத்து செய்துள்ளார். இட ஒதுக்கீடு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மாணவர்களுடன் பேச, அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.
ரத்து
இதனிடையே, போராட்டத்திற்கு காரணமான இந்த இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.