Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

ADDED : ஜூன் 16, 2025 10:37 AM


Google News
Latest Tamil News
லிமா: தென் அமெரிக்கா நாடான பெருவில், இன்று (ஜூன் 16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரு நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. தலைநகர் லிமா அருகே உள்ள கால்லோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டரில் 6.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பலமாக குலுங்கின. லிமாவில் வீட்டு சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பல இடங்களில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. தலைநகர் லிமாவை நிலநடுக்கம் உலுக்கியது. சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் லிமாவில் நடைபெற்று வந்த கால்பந்து போட்டி நிறுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us