அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?

யாருக்கு வாய்ப்பு?
நார்வே நாட்டைச்சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம், யாருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது. அதன்படி பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த கண்காணிப்பு குழு, சூடான் நாட்டில் செயல்படும் தன்னார்வ மீட்புக் குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் டிரம்ப் இல்லை. ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி நவல்னி என்ற எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். அவரது மனைவி யூலியா, பரிசுக்கு தேர்வு செய்யப்படும் பட்டியலில் இருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்ன செய்வார் டிரம்ப்?
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர் பெயர் அக்டோபர் 10ல் அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது, தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் டிரம்ப் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது.


