தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
ADDED : மே 23, 2025 09:09 PM

சிங்கப்பூர்: “வரும் தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்,” என அந்நாட்டு அமைச்சர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு அமைச்சர் சண்முகம் பேசியதாவது: அடுத்த 20, 30 ஆண்டுகளில் என்னைப் போல இயல்பாக மேடையில் தமிழ் பேசக் கூடிய ஒரு அமைச்சர் இருப்பாரா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
வரும் தலைமுறையினர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். உங்களைப் போன்ற இளம் முன்னோடிகள் எங்களுக்குத் தேவை. இன்று ஆங்கிலத்தில் பேசுவதை பலர் உயர்வாக கருதுகின்றனர். தமிழ் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழ் ஒன்றாகும்.
தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாகக் கருதப்பட முடியுமா என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். 1960- 1970ம் ஆண்டுகளில் சில பார்லிமென்ட் உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர். பல இளைஞர்கள் முதன்மையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழை மட்டுமல்ல, பிற தாய்மொழி மொழிகளையும் பாதிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.