Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பாலஸ்தீனர்கள் பலி

உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பாலஸ்தீனர்கள் பலி

உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பாலஸ்தீனர்கள் பலி

உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பாலஸ்தீனர்கள் பலி

ADDED : ஜூன் 17, 2025 06:13 PM


Google News
Latest Tamil News
காசா: இஸ்ரேலின் டாங்கிகள் தாக்கியதில் உணவு மற்றும் உதவிக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனர்கள் பலியானதாக காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காசாவின் அல்-ரஷீத் தெரு பகுதியில் உணவு மற்றும் மருத்துவ உதவிக்காக காத்திருந்த, பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தின. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இது குறித்து காசா அமைச்சகம் கூறியதாவது:

தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில், உணவு லாரிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் நாசர் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் இதுவரை கூறவில்லை.

இவ்வாறு காசா அமைச்சகம் கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us