Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ சூறாவளி தாக்குதல் நடத்துவோம்; காசாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

சூறாவளி தாக்குதல் நடத்துவோம்; காசாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

சூறாவளி தாக்குதல் நடத்துவோம்; காசாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

சூறாவளி தாக்குதல் நடத்துவோம்; காசாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ADDED : செப் 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
ஜெருசலேம் : ' 'பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், காசாவை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி போல் தாக்குவோம ்' ' என, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இரண்டு ஆண்டை எட்ட உள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் உயரமான கட்டடங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேஸ் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று கூறியுள்ளதாவது:

பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், சக்திவாய்ந்த சூறாவளி போல காசாவை தாக்குவோம்; அது பெரும் அழிவை சந்திக்க நேரிடும். பயங்கரவாத கோபுரங்கள் தகர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us