Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பாதுகாப்பில் உள்ள இந்தியர்கள் :இஸ்ரேலில் துாதரகம் அறிவிப்பு

பாதுகாப்பில் உள்ள இந்தியர்கள் :இஸ்ரேலில் துாதரகம் அறிவிப்பு

பாதுகாப்பில் உள்ள இந்தியர்கள் :இஸ்ரேலில் துாதரகம் அறிவிப்பு

பாதுகாப்பில் உள்ள இந்தியர்கள் :இஸ்ரேலில் துாதரகம் அறிவிப்பு

ADDED : ஜூன் 15, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
ஜெருசலேம்: இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில் அங்குள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து இந்தியர்களும் இங்கு பாதுகாப்பாக உள்ளனர். நிலைமையை உன்னிப்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதற்காக 24 மணி நேர உதவி எண்கள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் இங்குள்ள இந்தியர்களிடம் தொடர்பில் உள்ளனர். மேலும் இங்குள்ளவர்களிடம் விழிப்புடனும், தேவையற்ற நடமாட்டத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு படையின் கட்டளைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us