Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்

தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்

தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்

தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்

ADDED : ஜூன் 29, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ''தனது தந்தையின் இரண்டாவது பதவிக்காலம் முடிந்ததும், தானோ அல்லது மற்றொரு டிரம்ப் குடும்ப உறுப்பினரோ அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் மகன் எரிக் சூசகமாக தெரிவித்தார்.

அமெரிக்கா அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவி வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பிறகு டிரம்ப் குடும்பம் மீண்டும் அரசியலில் நுழைய முடியும் என்று கூறி, எதிர்கால அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எரிக் டிரம்ப் பேட்டி அளித்தார்.

இது குறித்து எரிக் டிரம்ப் அளித்த பேட்டி: பொது வாழ்க்கையில் நுழைவது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருந்தாலும், அரசியல் பாதை தனக்கு எளிதானது. அரசியலில் லாபம் ஈட்டாத ஒரு குடும்பம் இருந்தால், அது டிரம்ப் குடும்பம் தான், என்றார்.

காலம் பதில் சொல்லும்!

டிரம்ப் வாக்குச்சீட்டில் இடம் பெற்றிருக்கும் இறுதித் தேர்தலாக 2024ம் ஆண்டு இருக்குமா என்று கேட்டபோது, ​​எரிக், 'காலம் பதில் சொல்லும். ஆனால் என்னை விட அதிகமான மக்கள் உள்ளனர்'' என பதில் அளித்தார்.



தற்போது, எரிக் டிரம்ப் எந்த அரசியல் லட்சியங்களையும் அறிவிக்காமல் நின்றாலும், அவரது கருத்துக்கள் டிரம்ப் வம்சம் அமெரிக்க அரசியலுடன் முடிவடையவில்லை என்பது எடுத்துரைக்கிறது. எரிக் பெரும்பாலும் திரைக்குப் பின்னால் இருந்து, டிரம்ப் குடும்பத்தின் வணிக சாம்ராஜ்யத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற குடியரசுக் கட்சி பிரமுகர்கள் அதிகரித்து வருவதால், டிரம்பிற்குப் பிந்தைய குடியரசுக் கட்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அமெரிக்க அரசியலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us