சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி: இலங்கையை ஒய்ட் வாஷ் செய்தது இந்திய அணி
சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி: இலங்கையை ஒய்ட் வாஷ் செய்தது இந்திய அணி
சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி: இலங்கையை ஒய்ட் வாஷ் செய்தது இந்திய அணி

'டாப்-ஆர்டர்' சரிவு
இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. மகேஷ் தீக்சனா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் சமிந்து விக்ரமசிங்கே பந்தில் சஞ்சு சாம்சன் 'டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த ரிங்கு சிங் (1), கேப்டன் சூர்ய குமார் யாதவ் (8) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.ஷிவம் துபே (13) சோபிக்கவில்லை. இந்திய அணி 48 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சூப்பர் ஜோடி
பின் இணைந்த சுப்மன் கில், ரியான் பராக் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. வணிந்து ஹசரங்கா வீசிய 14வது ஓவரில் ரியான் பராக் 2 சிக்சர் பறக்கவிட, 15 ரன் கிடைத்தன. கமிந்து மெண்டிஸ் பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட, இந்த ஜோடி 50 ரன் சேர்த்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது ஹசரங்கா பந்தில் சுப்மன் கில் (39) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஹசரங்கா பந்தில் ரியான் பராக் (26) 'பெவிலியன்' திரும்பினார்.