பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: ஆப்கனில் அப்பாவி மக்கள் 12 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: ஆப்கனில் அப்பாவி மக்கள் 12 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: ஆப்கனில் அப்பாவி மக்கள் 12 பேர் பலி

8 பேர் பலி
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தலிபான்கள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
காந்தகாரில் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தகாரில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களின் முகாம்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தம்
இதனிடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் செய்ய கத்தார், சவுதிக்கு அழைப்பு
இரு தரப்பினர் இடையே மோதல் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தான் அழைப்பு விடுத்த பேச்சுவார்த்தைக்கு வர ஆப்கன் தரப்பு மறுத்து விட்டது. இதையடுத்து கத்தார், சவுதி அரேபியா நாடுகள் முன்னின்று மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.


