Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

ADDED : ஜூலை 01, 2025 12:42 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவருக்கும் தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் 5 சவரன் நகை வரதட்சணை தருவதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் 4 சவரன் நகை மட்டுமே கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின், லோகேஸ்வரியை மாப்பிள்ளை வீட்டார்கள் ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணமான 4வது நாளில், லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் பன்னீர் மட்டும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us