மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?
மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?
மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?
ADDED : செப் 05, 2025 02:10 AM
சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி, தென்காசி மாவட்டம், கடையநல்லுார் நகராட்சி கூட்ட அரங்கில், தென்காசி மாநகராட்சியின் பா.ஜ., கவுன்சிலர்கள் ரேவதி, மகேஸ்வரி, சங்கரநாராயணன் ஆகியோர், பிரதமர் மோடியின் படத்தை மாட்டியுள்ளனர்.
ஆனால், தி.மு.க.,வினர் அடாவடியாக அகற்றியுள்ளனர். தி.மு.க., தலைவர்களின் படங்கள் எல்லாம் பாகுபாடின்றி அரசு அலுவலகங்களை அலங்கரிக்கையில், பிரதமரின் படத்திற்கு மட்டும் எதற்கு கட்டுப்பாடுகள்? அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், உலகின் மூத்த தலைவரை அவமதிக்க துணியும் அறிவாலயத்திற்கு, வரும் சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,