Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

ADDED : ஜூன் 06, 2024 06:52 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யும்.

நாளை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், மணிக்கு 40 கி.மீ., வேகம் வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், கடலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல் 12 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us