Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ADDED : அக் 15, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் தான் த.வெ.க.,வினர் கூட்டம் நடத்தி உள்ளனர். இருந்தபோதும், த.வெ.க.,வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அப்படியிருக்கும் போது, த.வெ.க.,வை தி.மு.க., முடக்கப் பார்க்கிறது என எப்படி சொல்ல முடியும்?

பா.ஜ., கொள்கை எதிரி; தி.மு.க., எங்களுக்கு அரசியல் எதிரி என்று விஜய் சொல்லி இருக்கிறார். கரூர் சூழ்நிலையை பயன்படுத்தி, விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர பா.ஜ., முயற்சி எடுத்துள்ளது. அதனால் தான், சம்பந்தமே இல்லாமல் பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனை வைத்து வழக்கு போட வைத்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம்.

-சண்முகம், மா நில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us