தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாகவே பார்க்கிறோம்
தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாகவே பார்க்கிறோம்
தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாகவே பார்க்கிறோம்
ADDED : மே 17, 2025 04:56 AM

அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி உரிமைத்தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களது பொருளாதாரம் வளர்வதுடன், கிராம பொருளாதாரமும் மேம்படும். மற்ற திட்டங்களை விட நேரடியாக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை நீதிமன்றம் மட்டுமே தந்தது. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கிலும் நல்ல தீர்ப்பு வர வேண்டும். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பொருளாதார மாற்றம் வேண்டும். மின்வாரியத்திற்கு மட்டுமே ஒரு லட்சம் கோடி கடன் உள்ளது. இத்துறையில் இருந்து வரும் வருமானம் முழுவதையும், அக்கடனுக்கான வட்டியை தான் கட்டமுடியும். தமிழகத்திற்கு அதிக முதலீடு வருவதால், வளர்ச்சி அடைந்த மாநிலமாக தான் பார்க்கிறோம்.
-கார்த்தி, எம்.பி., தமிழக காங்.,


