Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

UPDATED : மே 30, 2025 11:26 AMADDED : மே 30, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில் இன்று(மே 30) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி விஜய் பாராட்டினார் . அவர் பேசுகையில், 'நீட் படிப்பு மட்டுமே படிப்பு அல்ல. அதற்கு வெளியே இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளன. மாணவ மாணவியர், எக்காரணம் கொண்டும் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று பெற்றோரை வலியுறுத்த வேண்டும் ' என்று வலியுறுத்தினார்.

பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்கினார். விருது பெற்ற மாணவர்களுடன் விஜய் போட்டோ எடுத்து கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us