நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் அறிவிப்பு:
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், 'ஆரஞ்சு அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
உடுமலை - மூணாறு வழித்தடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டதால், நேற்று காலை போக்குவரத்து பாதித்தது.
வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு
பாலக்காடு மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. நெம்மாரா என்ற பகுதியில் நேற்று காலை 6:00 மணிக்கு கனமழை பெய்த போது வீடு இடிந்து விழுந்ததில், பழனியம்மாள், 78, என்ற பெண், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். காயங்களுடன் தப்பிய அவரது மகள் பாப்பாத்தியை அப்பகுதி மக்கள் மீட்டு, நெம்மாரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மூணாறில் கொட்டித்தீர்த்தது மழை
மூணாறில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், இரவில் தீவிரமடைந்து கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணிப்படி 24 செ.மீ., பதிவானது.