Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கரூரில் உயிரிழந்தோருக்கு த.வெ.க., நிர்வாகி உதவி

கரூரில் உயிரிழந்தோருக்கு த.வெ.க., நிர்வாகி உதவி

கரூரில் உயிரிழந்தோருக்கு த.வெ.க., நிர்வாகி உதவி

கரூரில் உயிரிழந்தோருக்கு த.வெ.க., நிர்வாகி உதவி

ADDED : அக் 15, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
கரூர் : கரூரில், த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, சென்னை ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேரின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுதும் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, ஆயுள் காப்பீடு ஆகியவை தரப்படும் என, த.வெ.க., பிரமுகரும், சென்னை ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி தலைவருமான மரிய வில்சன் அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று கரூர் வடிவேல் நகரில் உள்ள, காவலர் குடியிருப்புக்கு வந்த ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி நிர்வாகிகள், த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த சுகன்யாவின் கணவர் போலீஸ் ஏட்டு தேவேந்திரனிடம், 5,000 ரூபாய் நிதியை வழங்கி ஆறுதல் கூறினர்.

இதுபோல, கரூரில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் நிதியுதவி வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us