நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

இடைநிலை ஆசிரியர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி திரு.வி.க., அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், பள்ளியில் பாலியல் குற்றம் நடப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது. செப்., 23ல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பள்ளியில் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் சிவக்குமார், ஆறாம் வகுப்பு மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின்படி, குளித்தலை போலீசார், போக்சோ சட்டத்தில், சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்
இளைஞருக்கு '20 ஆண்டு'
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் தீபக், 31. பைக் மெக்கானிக். திருப்பூரை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி ஒருவருடன், அவருக்கு சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது. 2023ல், தீபக், அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி தாளவாடி பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி பலாத்காரம்
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தனது 9 வயது பேத்தியுடன் மூல வைகை ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்றார். சிறுமியை ஆற்றின் ஒரு கரையில் உட்கார செய்து விட்டு மறு கரையில் மாட்டை கட்டி வைக்க சென்றுள்ளார்.
'மாஜி' போலீஸ்காரருக்கு சிறை
துாத்துக்குடி சக்திவினாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் தனசிங், 43. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த இவர் மீது, தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2017ல் காவல் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.


