முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,

திராவிட கட்சிகளை புலம்ப விடும் முருக பக்தர்கள் மாநாடு
பிரமாண்ட கட் அவுட், மிரட்டும் பேனர், சினிமா செட்டிங்கை மிஞ்சும் மேடை அமைப்பு, 'தலைவா...தலைவா...' என தொண்டை கிழிய கத்திக்கொண்டு போதையில் விசில் பறக்கவிடும் ஆதரவாளர்கள் கூட்டம் என்பதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள், மதுரையில் கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை பார்த்து, இது அல்லவா மாநாடு என பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
பல்டியடித்த திருமாவளவன்
இதன் எதிரொலியாக தான், மாநாடு நடப்பதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கட்சியினருடன் வி.சி., தலைவர் திருமாவளவன் தரிசனம் செய்து திரும்பும் போது, அவரிடம் ஒரு பக்த தம்பதி செல்பி எடுக்க கேட்டுக்கொண்ட போது, தன்னுடைய நெற்றியில் பூசியிருந்த திருநீறை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.
அமைச்சர்களின் 'சமாளிப்புகள்'
இவர் இப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பழநியில் நடத்தியது தான் உண்மையான ஆன்மிக மாநாடு; மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஏளனம் பேசிய தலைவர்கள், மாநாட்டிற்கு பின் டயலாக்கை மாற்றினர். தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, 'எங்க கட்சியிலும் தான் வேலு இருக்கிறார், முருகன் இருக்கிறார்' என சமாளிக்கிறார்.
அமைச்சர்கள் விரக்தி
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில் மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாங்கள் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றுள்ளது. திராவிடக் கழகத்தை எதிர்த்து 45 ஆண்டுகள் அரசியல் செய்வது ஹிந்து முன்னணி என தெரிந்து தான் மாநாட்டில் மக்கள் கூடினர். கட்டுப்பாட்டை பார்த்து மக்கள், போலீசார் எங்களை பாராட்டினர். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். பாரதி நினைப்பது போல் இது தி.மு.க.,விற்கு ஓட்டாகாது. அவர்கள் மாநாட்டு கூட்டத்தை பார்த்து விரக்தியில் பேசுகின்றனர் என்றார்.
முன்பு கந்த சஷ்டி கவசத்தை சிலர் அவமதித்த போது, எந்த கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இப்போது முருகன் மாநாட்டிற்கு பிறகு எல்லா கட்சிகளும் முருகன் எங்களுடனே உள்ளார் என்கின்றனர். மாநாட்டிற்கு முன்பு வரை, கலவரம் ஏற்படும் என்று பொதுமக்களிடம் பீதி கிளப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாட்டிற்கு பிறகு 'கப்சிப்' ஆகி விட்டன.