Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விருதுநகர் ஜவுளி பூங்காவில் ஆலை எப்போது வரும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏக்கம்

விருதுநகர் ஜவுளி பூங்காவில் ஆலை எப்போது வரும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏக்கம்

விருதுநகர் ஜவுளி பூங்காவில் ஆலை எப்போது வரும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏக்கம்

விருதுநகர் ஜவுளி பூங்காவில் ஆலை எப்போது வரும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏக்கம்

ADDED : ஜூன் 07, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க பணிகள் துவங்கி நடக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட 11 ஆலைகளின் கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என வேலைவாய்ப்புக்காக சுற்றுப்புற கிராம மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டு 2023 மார்ச்சில் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது. காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றனர்.

1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது.

ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன.

நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது. சிப்காட் திட்ட அலுவலகம் கட்டும் பணியும் முழுமை அடைந்துள்ளது. ஆலைகள் அமையும் இடங்களில் தேவைப்படும்ரோடு பணிகளும் துவங்க உள்ளன.

ஆனால் இப்பூங்காவில் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்த 11 நிறுவனங்களின் சார்பில் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.

இப்பகுதிகளில் பட்டாசு தொழில் மூலம் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு மாற்றாக ஜவுளி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் கடந்தும் பணிகளில் முன்னேற்றமில்லை. இதனால் ஆலைகள் எப்போது வரும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு ஜவுளி பூங்காவின் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us