Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது

கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது

கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது

கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது

ADDED : மே 16, 2025 02:43 AM


Google News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதமடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியது. இந்த காலத்தில்தான் வெப்பம் அதிகளவில் தாக்கும். வழக்கத்தை விட கூடுதல் வெப்ப அலை வீசும். நேற்று காலை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஊமை வெயிலாக இருந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெப்ப அலை வீசியது.

கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பம் பதிவானது. அதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைந்தது.

மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடியது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் குளிர்பான கடைகளில் குவிந்தனர். பகலில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் புழுக்கத்தினால் வயதானவர்கள், குழந்தைகள் அவதியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us