மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வளர்ச்சி விகிதம்
மதிய உணவு திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு உள்ளது. சிறு விவசாயிகளுக்கு 55% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45% மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளது.
நிதி வழங்கணும்
நமது அரசின் எல்லா திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டு என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்குத்தொகையை எந்தவித காலதாமதமின்றி விடுவிக்கிறோம்; அதேபோல மத்திய அரசு தன் நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சிலை திறப்பு
முன்னதாக, சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கிடையே அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ574 கோடியில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.