Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது

ADDED : செப் 09, 2025 09:19 PM


Google News
Latest Tamil News
மதுரை: கிரஷர் அமைக்க அனுமதி வழங்க ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் குசவபட்டியில் கிரஷர் வைக்க மதுரை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்க தாசில்தார் ராஜபாண்டி (45) ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார். பேரம் பேசியதில் லஞ்சம் ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இன்று டிரைவர் ராம்கே(32) மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி தாசில்தார் ராஜபாண்டியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us