Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

UPDATED : ஜூன் 18, 2025 07:18 PMADDED : ஜூன் 18, 2025 04:51 PM


Google News
Latest Tamil News
கோவை: கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியன் கோவில் சிலைகள் உடைப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கை:

புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது.

உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us