Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

ADDED : ஜூன் 02, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட விளக்கம்:

ஒவ்வொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு என்பது, செயல்பாடுகளின் முன்னேற்றம் உள்ளிட்ட நிலைகளை பொறுத்து காலாண்டு அடிப்படையில் மாறுபடும்.

பணிகள் நடக்கும் வேகத்திற்கு ஏற்ப, அந்த திட்டத்திற்கு, அந்த காலாண்டில் எவ்வளவு நிதியை பயன்படுத்த முடியும் என்பதை வைத்தே நிதி பகிர்வுகள் அமையும்.

ஒரே நேரத்தில் பல திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் சூழலில், சில திட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதியை, தேவையுள்ள திட்டங்களுக்கு மாற்றுவது வழக்கம்.

பொதுவாக, திட்ட அறிக்கை தயார் செய்வது, இடம் உறுதி செய்வது, மாநில அரசின் உதவியுடன் நிலம் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால், சில திட்டங்களில் பணிகள் தாமதமாகும்.

அப்போது, அந்த திட்டத்திற்கான காலாண்டு நிதியை பயன்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.

இத்தகைய விபரத்தை, தெற்கு ரயில்வே, வழக்கமான உள்துறை கடிதம் வாயிலாக ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்துள்ளது. ஆனால், இதை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன.

ரயில்வே வாரியம் மற்றும் மண்டல ரயில்வேக்கு இடையே, நிதி ஒதுக்கீடு தானியங்கி முறையில் நடைபெறும். தேவையான சமயத்தில், தெற்கு ரயில்வேக்கு முழுமையாக நிதி கிடைக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும்.

இவ்வாறு விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us