Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை

திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை

திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை

திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை

UPDATED : பிப் 28, 2025 09:47 AMADDED : பிப் 28, 2025 09:19 AM


Google News
Latest Tamil News
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடத்தல் குருவியா என விசாரிக்கின்றனர்.

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் ஒருவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சார்ஜாவில் இருந்து ஐஸ் கிரசர் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. கடத்தலுக்கு முக்கிய தலைவனாக உள்ளவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us