Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

ADDED : செப் 11, 2025 01:56 AM


Google News
சென்னை:திடீர் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் சார் - பதிவாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, பத்திரப்பதிவில் ஈடுபடுவோருக்கு, சார் - பதிவாளர்கள் உதவுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் மீது, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது .

போலி பத்திரப்பதிவு புகார் அடிப்படையில், திருநெல்வேலி மேலப்பாளையம் பொறுப்பு சார் - பதிவாளர் காட்டு ராஜா, கடலுார் மண்டலம் வடலுார் பொறுப்பு சார் - பதிவாளர் சுரேஷ் ஆகியோரை, பதிவுத்துறை 'சஸ்பெண்ட்' செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சார் - பதிவாளர்கள், நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து, பணிக்கு வந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us