வரும் 14 முதல் 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்' விழா
வரும் 14 முதல் 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்' விழா
வரும் 14 முதல் 18ம் தேதி வரை கோவையில் 'சங்கர விஜயம்' விழா
ADDED : பிப் 12, 2024 06:45 AM

கோவை : ஸ்ரீ ஆதிசங்கரரின் உபதேசங்கள், அனைவருக்கும் சென்றடையும் நோக்கில் கோவையில் வரும், 14 முதல் 18ம் தேதி வரை, 'சங்கர விஜயம்' திருவிழா நடக்கிறது.
சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் துறவறம் பெற்று, பொன்விழா ஆண்டு நிறைவு அடைவதையொட்டி, பல்வேறு நகரங்களில் மகோத்ஸவம் நடக்கிறது.
இத்திருவிழாவை, சாரதா பீடத்தை சேர்ந்த ஜகத்குரு ஸ்ரீ விதுஷேகரபாரதீ சுவாமிகள் கடந்த நவ., 8ம் தேதி, சிருங்கேரியில் துவக்கி வைத்தார்.
சங்கர விஜயம் திருவிழா, கோவை ரேஸ்கோர்ஸ், சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ளசாரதாலயத்தில் வரும், 14 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் துவக்கி வைக்கிறார்.
கோவை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடமும், சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷனும் இணைந்து நடத்தும் இந்த வைபவத்தில், தினமும் காலை கருத்தரங்கும், மாலை சொற்பொழிவும் நடைபெறுகிறது.
'தர்மமே திருவுருவமானவர்' என்ற, புகைப்பட கண்காட்சியும் நடக்கிறது. ஆதிசங்கரரின் உபதேசங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியில், 40 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கலாம்.
மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, 15ம் தேதி பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கும், 16ம் தேதி இளம் தம்பதியினருக்கும், 17ம் தேதி தொழில் வல்லுனர்களுக்கும் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை கருத்தரங்குகள் நடக்கின்றன.
ஸ்ரீ ஆதிசங்கரரும், சிருங்கேரி சாரதா பீடமும் என்ற பெயரில், வினாடி வினா நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஆதிசங்கரரின் கருத்துகள் குறித்து விவாதிக்கும் சதஸ் நிகழ்ச்சி, மத்திய சமஸ்கிருத பல்கலை முன்னாள் துணைவேந்தர் குடும்ப சாஸ்திரி தலைமையில் நடக்கிறது.
சங்கர விஜயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர், 90800 92100, 99940 73637, 97899 99160 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்வது கட்டாயம் என, விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.