மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13,807 கோடி; கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு!
மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13,807 கோடி; கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு!
மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13,807 கோடி; கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு!

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 கோடி வழங்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு.
* ராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு
* கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
* கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
* அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
* முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 6,100 கி.மீ., நீள சாலைகள் மேம்படுத்தப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
* எழும்பூரில் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
* அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.
* 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு.
* மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.
* 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.