Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ரூ.120 கோடி ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும்

ரூ.120 கோடி ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும்

ரூ.120 கோடி ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும்

ரூ.120 கோடி ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும்

ADDED : மார் 18, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில், 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கின்றனர். தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

ஆவின் நிறுவனம் பால் விநியோகிக்கும் விவசாயிகளின் நலனை காப்பதற்காக அறிவிக்கப்பட்ட, லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகையை, காலத்தே வழங்க வேண்டும். அதை நான்கு மாதங்களாக வழங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய, 120 கோடி ரூபாய்க்கும் அதிகமான, ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

வாசன், தலைவர், த.மா.க.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us