பொங்கலுக்கு பிறகு விலை குறையும்
போதிய விளைச்சல் இல்லாததால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பெய்த மழையால், புதிதாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் நெருங்குவதால், பச்சரிசி விலை உயர்ந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரிக்கும். அதன்பின் அரிசி விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
விலை மேலும் உயரும்!
தமிழக அரிசி ஆலைகளில், அரவைக்கு தேவையான நெல் இருப்பு குறைவாக உள்ளது. பொதுவாக 10,000 முதல் 15,000 மூட்டை நெல் கையிருப்பு வைத்திருப்பர். தற்போது 3,000 அல்லது 4,000 நெல் மூட்டைகள் கையிருப்பு உள்ளன. வட மாநிலங்களிலும் இதே நிலை தான். மோட்டா ரக அரிசி, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சம்பா பருவம் என்பது அக்., முதல் ஜனவரி வரை. இப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களில், விளைச்சல் அதிகம் இருக்கும். இம்முறை, மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம், ஏற்றுமதி, நெல் இருப்பு குறைவு போன்ற காரணங்களால், அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.