கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!

ஏன் கசக்கிறது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது. விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்.
தமிழகத்தை 3 முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது எல்லாம், உடனே வராத, நிதி தராத மத்திய நிதியமைச்சர் இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.
இங்கே தான்...!
மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள். தமிழகத்தின் மீது உள்ள அக்கறை காரணம் அல்ல, இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதனை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா, என்று பார்க்கிறார்கள்.
யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழ துடிக்கிற ஒட்டுண்ணி மாதிரி தான் பாஜ இருக்கிறது.மாநில நலனை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலமே இருக்க கூடாது என நினைக்கும் மத்திய பாஜ அரசுடன் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட்டணி வைத்து கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பாஜவை அதிமுக ஆதரிப்பதற்கு கொள்கை அடிப்படை இருக்கிறதா?
அசைன்மென்ட்
தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிப்பதற்கான வாஷிங்மிஷின் தான் பாஜ. அந்த வாஷிங் மிஷினில் உத்தமர் ஆகி விடலாம் என குதித்து இருக்கிறார் பழனிசாமி. அவருக்கு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
9 புதிய அறிவிப்புகள்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 9 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:


