வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

கைகலப்பு
இந்த கடைக்கு, கடந்த ஜூலை மாதம் இறுதியில், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, கேக் நன்றாக இல்லை எனக்கூறியதால், கடை உரிமையாளர் சிவகுமாருக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு
நீதிபதி காரில், அதே வளாகத்திலேயே உள்ள கிளை சிறைக்கு காவலர் சீருடையுடன் டி.எஸ்.பி., அழைத்து செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தை நாடுவோம்
முருகன் தரப்பு கொடுத்த புகாருக்கு நாங்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டது எப்படி சரியாக இருக்கும். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் எங்கேயும் தப்பி ஓடவில்லை. மதியம் முதல் நீதிமன்றத்திலேயே இருந்ததால், அவர் கழிப்பறைக்கு தான் சென்றார். தப்பி ஓடியதாக வந்த தகவல் பொய்யானது. நாங்கள், உயர் நீதிமன்றத்தை நாடி, இதற்கான தீர்வை பெறுவோம். - சண்முகம், காஞ்சிபுரம் எஸ்.பி.,